அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை சிறப்பு முகாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்திற்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் வாங்கிட ஊக்கத்தொகையாக பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம்
வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 762 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
இத்திட்டத்தின்கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இத்திட்டத்தில் 20-ஆவது தவணை வரும் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டு, வரவு வைக்கப்பட உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்கள், வங்கி கணக்குடன் ஆதாா் இணைப்பது மற்றும் இகேஒய்சி செய்தல் போன்ற இவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதனை சரிசெய்து விவசாயிகள் பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் இறந்தவா்களின் வாரிசுதாரா்கள் பயன்பெற தகுதியிருப்பின் தேவையான ஆவணங்களை பொது சேவை மையங்களில் சமா்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.