செய்திகள் :

'பிரசாரத்திற்காக தங்கையை களமிறக்கிய ஆதவ் அர்ஜூனா!' - பின்னணி என்ன?

post image

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய தங்கையை பிரசாரத்திற்கு களமிறக்கியிருக்கிறார்.

Seetha Lakshmi
Seetha Lakshmi

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின நிர்வாகிகள் கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் போதே ஆதவ் அர்ஜூனாதான் வில்லிவாக்கத்தில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, 'அடுத்த வாரத்திலிருந்தி வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கப் போகிறேன். என் சார்பில் என் தங்கை சீதா லெட்சுமியும் பிரசாரம் செய்வார்' என தங்கையை மேடையிலேயே நிர்வாகிகளுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். மார்ச் 29 ஆம் தேதி விஜய் தனது 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

Seetha Lakshmi
Seetha Lakshmi

இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தொகுதிக்குள் வீடு வீடாக பிரசாரம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆதவ் முன்பு கூறியதைப் போல நேற்றிலிருந்து தனது தங்கையையும் தொகுதியில் களமிறக்கியிருக்கிறார். அவரும் வீடு வீடாக போய் அண்ணனுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக ஆதவ் தனது தங்கையை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

விசிக மா.செ அவமதிப்பு? பிரபல ரௌடியுடன் தேர்தல் வேலை! - அடுத்தடுத்த சர்ச்சைகளில் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம்... மேலும் பார்க்க

கூட்டணியில் அழுத்தம் கொடுத்து தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் - வேட்பாளர் பட்டியல் வெளியாவது எப்போது?

தமிழக சட்டபேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பார்த்தால் இன்னும் 20 நாட்களே உள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி போன்ற பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட... மேலும் பார்க்க

`அது மட்டும் துரை வைகோ காதுக்கு போயிடுச்சுன்னா, நெற்றிக் கண்ணைத் திறந்து.!" - மல்லை சத்யா பேட்டி

மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறது.இது தொடர்பாக வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "I ignore him... மேலும் பார்க்க