செய்திகள் :

25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

post image

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட்டில் இருந்து இரண்டு, மூன்று நாள்களுக்குள் எடுத்து முக்கியமான செலவுகளை செய்கிற மாதிரி பணம் இருக்கிறதா என்று கேட்டால், பலரும் இல்லை என்றே சொல்வார்கள்.

ஆனால், இதே கேள்வி 55 வயதுடைய ஒரு நபரிடம் கேட்டால், ''யெஸ், தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் என பல வகையான முதலீடுகளில் பணத்தை வைத்திருக்கிறேன். 4, 5 நாள்களுக்குள் நான் ரூ.1 கோடியை எடுத்துவிட முடியும்'' என்பார்.

55 வயதில் ஒருவரிடம் ரூ.1 கோடி இருக்கிற மாதிரி, உங்கள் மகனோ / மகளோ 25 வயதாகும்போது அவர்களிடம் ரூ.1 கோடி இருந்தால், அந்தப் பணம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அளவில் நம்பிக்கையைத் தரும் இல்லையா?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த ஒரு விஷயத்தை எல்லாப் பெற்றோர்களும் செய்வதற்குத்தான் கடந்த புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஜூம் ஆன்லைன் தளம் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தியது 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்டிரிபியூஷன் நிறுவனம்.

இந்தக் கூட்டத்தில் பேசிய 'லாபம்' நிறுவனத்தின் கன்டென்ட் ஹெட், ''ஒரு குழந்தை பிறந்து 25 ஆண்டுகள் வளர்ந்து வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகே அவன் பெயரில் ஒரு எஸ்.ஐ.பி ஆரம்பிக்கிறான். அடுத்த 30 ஆண்டுகள் தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் பணம் சேர்த்தால், ஒரு கோடி ரூபாயை சேர்க்க முடியும்.

ஆனால், அதே குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அந்தக் குழந்தை 25 வயதிலேயே கோடி ரூபாய் சேர்த்துவிட முடியும். ஆக, ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யாமல் விட்டால், நாம் அந்தக் குழந்தையின் காலத்தைத்தான் வீணடிக்கிறோம் என்றே அர்த்தம். இந்த கால இழப்பு ஈடு செய்ய முடியாதது'' என்றார்.

children

இந்த வீடியோவில் 'லாபம்' நிறுவனத்தின் கன்டென்ட் ஹெட் பேசியதைக் கேட்டு நீங்கள் பயனடைய விரும்புகிறீர்களா? உங்களுக்கு அந்த வீடியோ வேண்டும் எனில், பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள். https://wa.me/919600296001?text=Webinar_blQ5ZucSAMk இந்த லிங்க் உங்களை 'லாபம்' சாட் பாட்டுக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய ஆர்வமா என்று கேட்கப்படும் கேள்விக்கு நீங்கள் ஆம் என்று பதில் அளித்தால், இந்த வீடியோவுக்கான லிங்க் கிடைக்கும்!

உங்கள் மகன்/மகள் 25 வயதில் ரூ.1 கோடி சேர்க்க எதில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை அந்த வீடியோ தெளிவாக எடுத்துச் சொல்லும். அதன்பிறகு அந்த வீடியோ சொல்கிற மாதிரி நீங்கள் நடந்துகொண்டாலே போதும், உங்கள் மகனை/மகளை 25 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆக்கிவிடலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

புதிய ஃபைனான்ஷியல் இயர்... உங்கள் வாழ்க்கை மாற இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

நாளை முதல் 2026-27-ஆம் நிதி ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த புதிய நிதி ஆண்டு தினத்தை மற்றுமொரு நாளாக நாம் நினைத்துவிடக் கூடாது. காரணம், அடுத்த நிதி ஆண்டை நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில... மேலும் பார்க்க

இன்றைக்கு ஒரு மாத வீட்டுச் செலவு ரூ.50,000... 10 ஆண்டுக்கு பிறகு ரூ.89,542 தேவை - எப்படி தெரியுமா?

இன்றைக்கும் பலரும் புரிந்துகொள்ளாத விஷயமாகத்தான் இருக்கிறது, பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு. இதனால் நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதை நம்மில் பலரும் புரிந... மேலும் பார்க்க

`இதை விட `அதிக லாபம்' வேண்டும்!' - சம்பாதித்த அத்தனை பணத்தையும் இழக்கும் பரிதாபம்! ஏன் இந்த நிலை?!

அதிக பணம் சேர்க்க வேண்டும்; அதுவும் குறுகிய காலத்தில் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. அப்படி நினைப்பவர்களின் நிஜத்தில் நிறைவேறுகிறதா என்று பார்த்தால், ஆசை நிறைவேறுவதற்குப் பதிலாக அத்த... மேலும் பார்க்க

"ஏங்க... நாம எப்ப கோடீஸ்வரன் ஆகுறது?" - இது கணவன் மனைவிக்கான ப்ளூபிரிண்ட்!

நீங்களும் வேலைக்குப் போறீங்க. உங்க மனைவியும் (அல்லது கணவரும்) வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேருக்கும் மாசம் நல்ல சம்பளம் வருது. ஆனா, மாசக்கடைசியில அக்கவுண்ட் பேலன்ஸ பார்த்தா மட்டும், யாரோ நம்மளை வெச்சு ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கம்... இப்போது என்ன செய்ய வேண்டும்? - சுனில் சுப்பிரமணியம் காட்டும் வழி!

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாகவே உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 8.54%, சென்செக்ஸ் 8.51% அளவுக்கும் இறக்கம் கண்டுள்ளன. ஆனால், ப... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டாளர்கள் இப்போது செய்யக் கூடாத `5' தவறுகள்!

அமெரிக்கா/இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த நான்கு வாரங்களாக நடந்து வருகிறது. ஈரான் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்மூஸ் நீரிணைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகின் பல நாடுகளுக்குக் கச்சா எண்ணெய்... மேலும் பார்க்க