செய்திகள் :

பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு திருட்டு; 40 மொபைல் போன்களைத் திருடியவரைத் தேடும் போலீஸ்

post image

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மாதேஷ்வரி மொபைல் கடையில் மர்ம நபர்கள் திங்கட்கிழமை இரவு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 40 ஸ்மார்ட் மொபைல் போன்களைத் திருடிச்சென்றுவிட்டனர்.

மொபைல் கடை உரிமையாளர் லட்சுமன் சென் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், படிக்கட்டுப் பகுதியிலிருந்த கதவின் பூட்டை உடைத்து, மேற்கூரை வழியாக கடைக்குள் நுழைந்த திருடர்கள், சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 முதல் 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை கடையைத் திறந்தபோது, ​​கடை முழுவதும் சூறையாடப்பட்டிருந்ததையும், விலையுயர்ந்த கைபேசிப் பெட்டிகள் காலியாகக் கிடந்ததையும், பொருட்கள் தரையில் சிதறிக் கிடந்ததையும் கண்டதாக லட்சுமன் சென் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்
பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்

புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்ற நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கடையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​சந்தேகப்படும் நபர் ஒருவர் தனது அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற முகமூடியை அணிந்து மொபைல் போன்களைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இங்கு மொபைல் போன் திருடிய கும்பல் அதே இரவில், சான்வாரியா மொபைல் என்ற மற்றொரு மொபைல் கடைக்குள் நுழையவும் இதே கும்பல் முயற்சி செய்துள்ளது. அந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளிலும், முகமூடி அணிந்த அதே நபர் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்க முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? - போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கிரிக்கெட் நட்சத்திரம் சஷாங் சிங் வீட்டில் சமையல்காரராக வேலை செய்தவர் விபேந்திரா சிங் தோமர் (31). இவர் போபால் காவல் நிலையத்தில் சஷாங் சிங் மீதும், அவரின் தந்தை மீது புகார... மேலும் பார்க்க

சென்னை: ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் - மனைவியைக் கொலைசெய்த வழக்கில் இளைஞர் கூறிய `பகீர்' தகவல்!

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். பின்னர் ரேஷ்மாவும், வெங்கடே... மேலும் பார்க்க

திருச்சி: போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு; போலீஸார் விசாரணை

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள கால்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர், அப்பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உயிரிழந்து கிடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆணவக் கொலையா? காதலித்து வந்த இளைஞர், மாணவி இருவரும் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பார்த்திபன் வயது 19. கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.அருகிலுள்ள சாத... மேலும் பார்க்க

கேரளம்: 12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை; அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். ச... மேலும் பார்க்க