செய்திகள் :

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

post image

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும் மந்தமால் என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டாக காட்டுக்குள் பீடி தயாரிக்க பயன்படும் இலைகளை பறிக்க நேற்று காலை வனப்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் நேற்று மாலை காட்டிற்குள் இலைகளை பறித்துக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு புலி ஒன்று வந்தது. அவர்கள் மீது பாய்ந்த புலி அவர்களை தாக்க ஆரம்பித்தது. பெண்கள் புலியிடமிருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால் அவர்கள் மீது புலி பாய்ந்து தாக்கியது.

இதில் காந்தாபாய், அவரது மருமகள் சுபாங்கி மற்றும் சரிதா(50) ஆகியோர் புலி தாக்கியதில் அவர்கள் இறந்து போனார்கள். மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார். ஒரே நேரத்தில் புலி மூன்று பேரை அடித்து கொன்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட புலியை உடனே பிடிக்கவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதோடு காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

`வேலை பறிபோக அவர்தான் காரணம்'- சி.பி.ஐ அதிகாரிமீது அம்பு எய்து 30 வருடம் கழித்து பழிவாங்கிய முதியவர்

உத்தரப்பிரதேசத்தில் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியர் 30 ஆண்டுகள் கழித்து தனது வேலை பறிபோக காரணமாக இருந்த சி.பி.ஐ அதிகாரியை பழிவாங்கி இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில்... மேலும் பார்க்க

`நீயும் நானும் வேற இல்லடா' - இந்து ஜோடியின் திருமணத்திற்கு இடம்கொடுத்த முஸ்லிம் குடும்பம்

புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த ஹாலில் முஸ்லிம் திருமண ஜோடிக்கு திருமண வரவ... மேலும் பார்க்க

Chhonzin Angmo: எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் 'பார்வை சவால்' கொண்ட இந்தியப் பெண்!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பார்வை சவால் கொண்ட சோன்சின் அங்மோ, மனஉறுதியோடு எவரெஸ்ட்டில் ஏறி இந்தியாவின் மூவர்ணக்கொடியை அதன் சிகரத்தில் நட்டுள்ளார். 'எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பார்வை சவால் ... மேலும் பார்க்க

இனி ’மைசூர் பாக்’ இல்ல, 'மைசூர் ஸ்ரீ'.... இனிப்புகளின் பெயரிலிருந்து ’பாக்’ என்ற சொல் நீக்கம்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வந்த பதற்றங்களை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரு நாடுகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க