செய்திகள் :

புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

post image

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட வெகுண்டெழுந்தனர்.

போராட்டம் தொடங்கிய ஐந்து நாள்களில் (செப்டம்பர் 9) அப்போதைய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்று சமூக வலைதளங்களின் தடையும் ரத்து செய்யப்பட்டது.

நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்

தேர்தல்

இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்த நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பொறுப்பேற்றார். இவர் தான் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வேண்டும் என்று கடந்த மார்ச் 5-ம் தேதி அங்கே தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் காத்மாண்டு மேயரும் முன்னாள் ராப்பருமான பாலேந்திரா ஷாவின் ராஸ்ட்ரிய சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.

நேற்று பாலேந்திரா ஷா பிரதமராக பதவியேற்றார்.

கைது

இவர் பிரதமராக பதவியேற்ற அடுத்த நாளே (இன்று) கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரது முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டு பேரும் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை வன்முறையால் ஒடுக்க முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பிரசாரம் மேற்கொண்டார். மலம்புழ... மேலும் பார்க்க

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், த... மேலும் பார்க்க

பி.டி.ஆருடன் மோதும் சுந்தர்.சி! - மதுரை மத்தி தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரானது எப்படி?

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பாக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள்... மேலும் பார்க்க

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என எச்சரிக... மேலும் பார்க்க

"திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது சரியா?" - குஷ்பு ஷாக்

திருமணமான ஒருவர் வேறொருவருடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மத்தியப் பிரத... மேலும் பார்க்க

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி - புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி.இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க