செய்திகள் :

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு உணவு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட டோக்கனை ஜெரினா, ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு சென்று உணவை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல்
தாக்குதல்

அப்போது, அதைக் கண்ட நிர்வாகிகள் பசிக்காகப் போலி டோக்கன் கொடுத்து உணவு வாங்குவது தவறு என்று கூறி, அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பது போலவும், பர்தவைக் கழட்டச் சொல்லி மிரட்டுவது போலவும் வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் பெண் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர்,

"தவறு செய்த ஜெரினா என்ற பெண்ணை போலீஸில் ஒப்படைத்திருக்கலாம். அல்லது அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லி அதனைக் கண்டித்து இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் பர்தாவைப் பிடித்து கிழித்து அடித்து மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

ammapattinam
ammapattinam

தனது வயிற்றுப்பசியைப் போக்க ஒருவேளை உணவிற்காகத் தவறு செய்த பெண்ணைத் தண்டிக்கும் இந்த ஜமாத்தார்கள் செயலை தமிழக காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண் தவறே செய்திருந்தாலும், பர்தாவைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

உணவுக்காக யாரையும் கையேந்த விடக்கூடாது. ஆனால், அந்த உணவைத் தானாக வந்து கேட்ட பெண்ணை இப்படி அவமானப்பாடுத்தியது, அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு பாதித்திருக்கும்?" என்றார்கள்.

இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ,

"அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் பர்தாவைக் கழற்றச் சொன்னார்கள்.

பர்தாவைப் பிடித்து கிழிக்கவெல்லாம் இல்லை. இங்குள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் சாதாரணமாக நடந்ததிந்த நிகழ்வு குறித்த இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

attack
attack

எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த விழாவையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் உணவு கேட்டு வந்த பெண்ணை அவமானப்படுத்துவார்களா? போலி டோக்கன் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கப் போய், இப்படி வீண் பரபரப்பாகிவிட்டது" என்றார்கள்.

ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவினைப் பார்த்த பலரும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து, அவரை அடித்து துன்புறுத்தினார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க