செய்திகள் :

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் வெங்கடாசலம். ஆலங்குடி பகுதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த இவரை 2010 , அக்டோபர் 7 ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் அவருடைய வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தது.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மூத்த மனைவியின் மகன் ராஜபாண்டியன். இவர் அதிமுக ஜெ பேரவை நிர்வாகி ஆவார். இளைய மனைவியின் மகன் ராஜராஜன் விவசாயி.

இவர்களுக்கு இடையே குடும்பச் சொத்து ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், தனக்கு பங்கு இருப்பதாகக் கூறி தம்பி ராஜராஜனை வீட்டிற்குள் விடாமல் ராஜபாண்டியன் மிரட்டி வந்துள்ளார்.

இதனால் வீட்டைப் பூட்டி ராஜராஜனை வெளியேற்றியதால், அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி வந்தார். பின்னர் வீட்டை மீட்க நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ராஜராஜன், நேற்று (செப்டம்பர் 2) போலீஸாரிடமிருந்து வீட்டின் சாவியைப் பெற்றார்.

இன்று (வியாழக்கிழமை) காலை ராஜராஜன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜபாண்டியன் அரிவாளால் வெட்டப் பாய்ந்துள்ளார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் பதுங்கிய தம்பியை விடாமல் துரத்திய அண்ணன் ராஜபாண்டியன், கத்தியால் குத்தியதுடன், அங்கிருந்த சிலிண்டரைத் தூக்கி தலையில் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

இதில் ராஜராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பியைக் கொலை செய்த அண்ணனை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க