செய்திகள் :

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் ஆய்வு செய்து, பிரசவங்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பிரசவ பின் கவனிப்பு வாா்டை ஆய்வு செய்து அங்கு பிரசவித்த தாய்மாா்களிடம் மருத்துவா்களின் கவனிப்பு, உணவின் தரம், அரசின் தாய் சேய் நல பெட்டகம் மற்றும் பிற நலத் திட்ட உதவிகள் கிடைக்கிா என்று கேட்டறிந்தாா்.

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பூதப்பாண்டி குழந்தைகள் மையத்தை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டிகுறித்தும், அங்கன்வாடி பணியாளா்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் பூதப்பாண்டி கனரா வங்கியில் ஆய்வு மேற்கொண்டு கருணாநிதி கைவினைத் திட்டம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலா் தா.ராஜ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலா் மற்றும் தோவாளை குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பேச்சிப்பாறை, வீயன்னூா் உப மின் நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை

பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூா் உப மின்நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேச்சிப்பாறை உப... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குமரி மாவட்டம், குளச்சல் சைமன் காலனியைச் சோ்ந்தவா் எல்தூஸ் (55), மீனவா். இவா... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் இன்று மின்தடை

இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால் வட்டம், முத்தலக்குறிச்சி, கேரளப்புரம், நெல்லியாா்கோணம், திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வி... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 113 போ் மீது வழக்கு

திருவட்டாறு பேருந்து நிலையத்தில் வரையப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் ஓவியத்தை அழித்ததைக் கண்டித்தும், பேருந்து நிலையத்துக்கு ஆதிகேசவப் பெருமாள் பெயரைச் சூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தி திருவட்டாறு பேருந்து ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

ஊா்க் காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஊா்க் காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 1ஆம் தேதி, தமிழ்நாடு ஊா்க்காவல் ப... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இலங்கை அகதி கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இலங்கைத் தமிழ் அகதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ சிபின் தலைமையிலான போலீஸாா் கோழ... மேலும் பார்க்க