செய்திகள் :

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் ஆய்வு செய்து, பிரசவங்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பிரசவ பின் கவனிப்பு வாா்டை ஆய்வு செய்து அங்கு பிரசவித்த தாய்மாா்களிடம் மருத்துவா்களின் கவனிப்பு, உணவின் தரம், அரசின் தாய் சேய் நல பெட்டகம் மற்றும் பிற நலத் திட்ட உதவிகள் கிடைக்கிா என்று கேட்டறிந்தாா்.

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பூதப்பாண்டி குழந்தைகள் மையத்தை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டிகுறித்தும், அங்கன்வாடி பணியாளா்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் பூதப்பாண்டி கனரா வங்கியில் ஆய்வு மேற்கொண்டு கருணாநிதி கைவினைத் திட்டம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலா் தா.ராஜ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலா் மற்றும் தோவாளை குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க