செய்திகள் :

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர்

post image

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றியது மிக முக்கியமாக பேசப்பட்டது... மிக அதிகமாக கவனிக்கவும் பட்டது.

ஆனால், இந்த ஆண்டு இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

ஆம்... 11,000 இந்தியர்களை வெளியேற்றி உள்ளது சவுதி அரேபியா. அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

ஒரு ஆண்டில் 26,400 இந்தியர்கள் வெளியேற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கை.

ஏன் அதிகளவில் வெளியேற்றம்?

இதற்கான பதிலையும் வெளியுறவுத்துறை அமைச்சகமே வழங்கி உள்ளது.

இதற்கு கூறப்படும் முக்கியமான காரணங்கள்...

1. விசா காலம் முடிந்தும் அங்கேயே தங்குவது

2. வேலை செய்வதற்கான தகுந்த பெர்மிட் இல்லாதது

3. அந்தந்த நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறுவது

4. முதலாளிகளிடம் இருந்து சென்று விடுவது

5. அங்கே ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுவது

போன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுகிறார்கள் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி மு... மேலும் பார்க்க

DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?

'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்'- ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.ஒரு... மேலும் பார்க்க

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தே... மேலும் பார்க்க

"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" - சொல்வது ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத... மேலும் பார்க்க