செய்திகள் :

"பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு" - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்

post image

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்எல்ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு, இதில் பங்கு கொடு எனக் கேட்கிறார்கள்.

இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்துகொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்கக் கூடாது. நாமும் கொடுக்க விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இல்லை என்றால் இந்தியா கூட்டணியே கிடையாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால்தான் இந்தியா கூட்டணியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள்தான் இருக்கிறது.

முதலமைச்ச மு.க.ஸ்டாலினுடன் எம்எல்எ கோ.தளபதி
முதலமைச்ச மு.க.ஸ்டாலினுடன் எம்எல்எ கோ.தளபதி

பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இவருடைய பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, "திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? 

ஜோதிமணி
ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும்தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம். 

கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்கூட பேசவேண்டிய இடத்தில்தான் பேசியிருக்கிறேன். 

ஜோதிமணி
ஜோதிமணி

வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைப்பிடிப்பதுதான் நல்லது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது" எனப் பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை" - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியு... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் ... மேலும் பார்க்க

"தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது" - சௌமியா அன்புமணி

மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுக... மேலும் பார்க்க

"எங்களைப் பற்றி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால்" - டிடிவி தினகரன் காட்டம்

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, ”ஊழல் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி எங்க... மேலும் பார்க்க

"பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!"– முதல்வர் ஸ்டாலின் விளாசல்

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. கனிமொழி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற ... மேலும் பார்க்க