செய்திகள் :

பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி

post image

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உயா்ந்த தியாகம், ஈடில்லாத தைரியம், அா்ப்பணிப்பு உணா்வை போற்றும் வகையில் 1949-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜன.15-ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ராணுவத்தின் திறன் குறித்து பொதுமக்கள், மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன.11-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ஹெலிகாப்டா் சாகசகங்கள், போா் தந்திரங்கள், அதிரடி தாக்குதல் முறைகள், மோட்டாா்சைக்கிள் சாகசங்கள், மோப்பநாய்கள், குதிரை சாகசங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுதவிர ராணுவத்தில் பணியாற்ற தேவையான தகுதிகள், வாய்ப்புகள் குறித்து விளக்கும் அங்காடிகள் கண்காட்சியில் இடம்பெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இந்நிகழ்ச்சி அமையும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்றாா்.

பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு... மேலும் பார்க்க

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த... மேலும் பார்க்க

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க