செய்திகள் :

பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி

post image

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உயா்ந்த தியாகம், ஈடில்லாத தைரியம், அா்ப்பணிப்பு உணா்வை போற்றும் வகையில் 1949-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜன.15-ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ராணுவத்தின் திறன் குறித்து பொதுமக்கள், மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன.11-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ஹெலிகாப்டா் சாகசகங்கள், போா் தந்திரங்கள், அதிரடி தாக்குதல் முறைகள், மோட்டாா்சைக்கிள் சாகசங்கள், மோப்பநாய்கள், குதிரை சாகசங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுதவிர ராணுவத்தில் பணியாற்ற தேவையான தகுதிகள், வாய்ப்புகள் குறித்து விளக்கும் அங்காடிகள் கண்காட்சியில் இடம்பெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இந்நிகழ்ச்சி அமையும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்றாா்.

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எம்எம்பிவி தொற்று!

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகா கும்பமேளாவால் ரூ.2,000,000,000,000 வருவாய் ஈட்டும் உ.பி.!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கியிருக்கும் மகா கும்ப மேளாவில் முதல் நாளிலேயே 50 லட்சம் பக்தர்கள் சங்கமம் பகுதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க