செய்திகள் :

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

post image

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர் வாடகை புதுப்பிப்பு அக்ரிமெண்ட் ஒன்றை டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்.

அந்த ஆவணங்களை டெலிவரி பாய் அப்பெண் வீட்டிற்கு எடுத்து வந்தார். வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்பெண்ணிடம் தான் கொண்டு வந்த பொருளை டெலிவரி செய்ய ஒ.டி.பி. கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதோடு கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

போனை எடுப்பதற்காக அப்பெண் வீட்டிற்குள் சென்றார். இச்சமயத்தில் டெலிவரி பாய் வீட்டிற்குள் சென்று கழிவறைக்குள் நுழைந்தார். ஆனால் உள்ளே நுழைந்த டெலிவரி பாய் கழிவறையிலிருந்து வெளியில் வரும்போது தனது உடையைக் கழற்றிய நிலையில் அந்தரங்க உறுப்பை அப்பெண்ணிற்குக் காட்டியபடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் வெளியில் ஓடி வந்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தார்.

உடனே அவர்கள் மகேஷ் என்ற அந்த டெலிவரி பாயை பக்கத்து வீட்டுக்காரர்களும், கட்டிட வாட்ச்மெனும் சேர்ந்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ''என்னிடம் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். நான் போனை எடுக்க சென்ற நேரத்தில் உள்ளே நுழைந்துவிட்டார்'' என்று தெரிவித்தார்.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க