செய்திகள் :

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

post image

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் என்னென்னவோ வழிகளைப் பின்பற்றுகிறார்கள். வீட்டில் ஏ.சி வசதி இருந்தால் ஏ.சி போட்டு உள்ளே இருந்து கொள்கிறார்கள். ஆனால் ஏ.சி வசதியும் இல்லாமல் திடீரென மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது.

ஐ.டி நகரமாக கருதப்படும் பெங்களூருவும் இதற்கு விதிவிலக்கல்ல. பெங்களூருவில் வசிக்கும் பிரியா என்ற பெண் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏ.சி அறையை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் அதில் தங்கி இருந்து வெப்பத்தை தணித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஹோட்டலுக்குச் சென்று ஏ.சி அறை புக்கிங் செய்வது மற்றும் ஏ.சி அறைக்குச் செல்வதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், வீட்டில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ஏ.சி அறையை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து ஏ.சி காற்றை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார். `மழை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மழை வரவில்லை. எனவே ஏர் கூலர் அல்லது ஏ.சி வாங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அனைத்தையும் டெலிவரி செய்ய ஒரு வாரம் எடுக்கும் என்று சொல்லிவிட்டார்கள். குளிர்சாதன வசதி சாதனங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று பார்த்தோம். அதுவும் அருகில் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஆன்லைனில் ஏர்கூலர் ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாளை ஹோட்டல் ஏ.சி அறையில் செலவிடலாம் என்று முடிவு செய்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஏர் கண்டிஷனர் இல்லாமல் தன்னால் இனி சமாளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பிரியாவின் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது.

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனா... மேலும் பார்க்க

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூ... மேலும் பார்க்க

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க