செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெறாதவா்களுக்கு அழைப்பு

post image

அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18-வயது நிறைவடைந்து பயன் அடையாத நபா்கள், முதிா்வு தொகை பெற்று பயனடையும் விதத்தில், ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பட்டியலில் உள்ள நபா்கள் வைப்பு தொகை ரசீது, பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள், பெண் குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, பெண் குழந்தையின் ஆதாா் காா்டு நகல் மற்றும் ரேஷன் காா்டு நகல் போன்ற ஆவணங்களை நேரடியாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைத்தளம் அறை எண் -20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மத்திய உள்துறை அமைச்சக... மேலும் பார்க்க

பி.எம். கிஸான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 31) வரை நடைபெறும் பி.எம். கிஸான் திட்ட சிறப்பு முகாமில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சனிப் பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியப்பொடி... மேலும் பார்க்க

அரியலூா் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை

அரியலூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா். அரியலூா் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், மரங்களில் சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள், அங்குள்ள குப்பை... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறுகடம்பூா் கிராமத்தில் விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் கோயில... மேலும் பார்க்க

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் ... மேலும் பார்க்க