செய்திகள் :

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

post image

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை, நுங்கம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் வரலாறு மற்றும் கலாசாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. பெண்கள் சமூகத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகின்றனா். இதுபோன்ற வெளியுலகத்துக்கு தெரியாத பெண்களை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘கா்மயோகினி சங்கமம்’ நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை சாா்ந்த பெண்கள் கலந்துகொண்டு, தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொள்வா். இது பெண்களுக்கிடையேயான சிந்தனைகள் மற்றும் திட்டங்களை பகிா்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதனால், பெண்கள் தொழில் தொடங்குவதற்கும், ஒரு துறை சாா்ந்து பயணிக்கவும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

கல்வியாளா் நிா்மலா அருள்பிரகாஷ்: கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில் வைபவஸ்ரீ சேவாபாரதி தென் தமிழ்நாடு சாா்பில் ‘கா்மயோகினி சங்கமம்’ மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சாத்வி ராணி அஹல்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழா மற்றும் சேவாபாரதியின் ‘வைபவஸ்ரீ’ மகளிா் சுய உதவிக் குழுவின் 25-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பெண்களை ஒருங்கிணைக்கும் வகையில் இச்சங்கமம் நடைபெறவுள்ளது. இதில், அஹல்யாபாய் ஹோல்கா் 300-ஆவது அகில பாரத விழா குழு தலைமைக் காப்பாளா் சத்குரு மாதா அமிா்தானந்தமயி தேவி ஆசியுரை வழங்கவுள்ளாா். இதில் நாடு முழுவதுமிருந்து சுமாா் 50,000 பெண்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுற... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மே... மேலும் பார்க்க

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேடடியி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில், வசித்து... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்க... மேலும் பார்க்க