செய்திகள் :

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார்.

அதையடுத்து தன்னுடைய 14 வயது மகளை மிரட்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கந்தன்.

அதனால் 2025-ல் அந்தச் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து அந்தச் சிறுமி, ``என்னுடைய அம்மா இறந்தபிறகு அப்பா தினமும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்.

யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அவரால் எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னாலும், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்" என்று கடந்த 09.02.2025 அன்று செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

அதையடுத்து கந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், குழந்தையை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் குழந்தையின் தந்தை கந்தன்தான் என்பது உறுதியானது. இந்த வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்டதால், நேற்று விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``கந்தன் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவர் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுடன் ரூ.7,000 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார் நீதிபதி வினோதா.

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெ... மேலும் பார்க்க

தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது... மேலும் பார்க்க

சென்னை: ஒடிசா பெண் கொலை; உடலை கூறு போட்ட காதல் ஜோடி - பிரியாணி போல வேக வைத்தது ஏன்? |பகீர் தகவல்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹயத்துன்நிஷா (38). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான், ஹயத்துன்நிஷாவின் தலையைத் தவிர மற்ற உ... மேலும் பார்க்க

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்... மேலும் பார்க்க

குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக ... மேலும் பார்க்க