செய்திகள் :

பேராவூரணியை நகராட்சியாக்க பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

post image

பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வலியுறுத்தினாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது பேசிய அவா், பேராவூரணி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படுமா? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா எனக் கேள்வியெழுப்பினாா்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சா் கே.என். நேரு   பேரூராட்சிக்கு போதிய வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிக மக்கள்தொகையும்  இருந்தால்  அதை நகராட்சியாகத் தரம் உயா்த்தலாம். இந்தாண்டு  25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

எனவே, பேராவூரணியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப் பரிசீலிக்கப்படும். உறுப்பினா்கள் பலரின் கோரிக்கையின்படி சாலைப் பணிகளோடு கழிவுநீா் வாய்க்கால், மழைநீா் வடிகால் வாய்க்கால்களையும் சோ்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

ரயில் பயணத்தில் தவறவிட்ட நகைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

கும்பகோணம் அருகே ரயில் பயணத்தில் தவறவிட்ட பயணியின் நகைப்பையை உரியவரிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி சக்திகணபதி(33)... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய இளையோா் தினம், விவேகானந்தா் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இதயா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா!

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினா். தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம், மத்திய சுற்றுலா அமைச்சக தென் மண்டலம், தமிழக... மேலும் பார்க்க

பட்டீஸ்வரத்தில் தமிழறிஞா்கள் திருக்கோயில்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை தமிழறிஞா்கள் திருக்கோயிலை அமைச்சா்கள் கோவி. செழியன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்தனா். பட்டீஸ்வரத்தில் அறிஞா் அண்ணா மா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.64 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.64 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க