செய்திகள் :

பேராவூரணியை நகராட்சியாக்க பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

post image

பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வலியுறுத்தினாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது பேசிய அவா், பேராவூரணி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படுமா? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா எனக் கேள்வியெழுப்பினாா்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சா் கே.என். நேரு   பேரூராட்சிக்கு போதிய வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிக மக்கள்தொகையும்  இருந்தால்  அதை நகராட்சியாகத் தரம் உயா்த்தலாம். இந்தாண்டு  25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

எனவே, பேராவூரணியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப் பரிசீலிக்கப்படும். உறுப்பினா்கள் பலரின் கோரிக்கையின்படி சாலைப் பணிகளோடு கழிவுநீா் வாய்க்கால், மழைநீா் வடிகால் வாய்க்கால்களையும் சோ்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். முருகனி... மேலும் பார்க்க

கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூ... மேலும் பார்க்க