செய்திகள் :

`பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம்!' - பரிசுத் தொகை வருவதை உறுதி செய்கிறதா வழிகாட்டல் சுற்றறிக்கை?

post image

பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், கரும்பு முதலியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை கடந்த சில வருடங்களாக மக்களுக்கு வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

ஆரம்பத்தில் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிறகு ரொக்கமாக பணமும் சேர்த்து வழங்கத் தொடங்கினர். ஆயிரம் ரூபாயாக இருந்த அந்தத் தொகை கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்டு இரண்டாயிரமாக வழங்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் பெரும்பாலான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதால் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் தொகை தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

பொங்கல், கரும்பு.

எனினும் அரசு இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவை எடுக்கவில்லை.

கடந்த வருடத்துக்கு முந்தைய ஆண்டு தொகை வழங்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கப்படவில்லை.

எனவே இந்தாண்டு தொகை இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு  மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் இது தொடர்பான  ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.

அதில், பொங்கல் பரிசு தொகுப்பில் இம்முறை பணம் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `பணத்தை பட்டுவாடா செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். பணம் வழங்கும் பணியினை வெளி நபர்களிடம் வழங்க வேண்டாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடையின் பணியாளர்கள் மட்டுமே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.!

நியாயவிலைக் கடைகள் மூலமே இந்த தொகை வழங்கப்பட்டு வருவதால் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளில், இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வாய்ப்புள்ளது.

எனவே அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிப் பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால் எவ்வளவு தொகை என்பது தெவிக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களாக இந்தத் தொகையை 5000 ஆக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

எவ்வளவு தொகை என்பது குறித்து துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம்.

’மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டமாக விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் நிதிச்சுமையைக் காரணம் காட்டி சென்ற வருடம் போல இந்தாண்டும் பணம் வேண்டாமென்றுதான் முதலில் அரசு முடிவு செய்ததாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பிறகே, இந்தாண்டு தேர்தல் வேறு இருப்பதால், விஷயம் தேர்தலில் எதிரொலிக்கலாமென அஞ்சியே பணம் கொடுக்கலாமென்கிற முடிவுக்கு பிறகு வந்ததாக கூறுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதேநேரம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என்கிற அளவில் மட்டுமே தொகை இருக்கும் என்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிதித் துறையில் பேசி கடைசி நேரத்தில் தொகை எவ்வளவு என்பது முடிவாகலாம்’ என்றனர் அவர்கள்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகையை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நான்கைந்து பரிசுப் பொருட்கள் பணமும் சேர்த்து வழங்கும் போது வேலைப்பளு மற்றும் அதிகப்படியான தொகையைக் கையாள்வதில் எழும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் அவர்கள், மக்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகையை வரவு வைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நியாயவிலைக்கடை பணியாளர்

‘நம்மை விட சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அப்படி வழங்கும் போது இங்கு வழங்குவதில் என்ன சிக்கல் எனக் கேட்கின்றனர் அவர்கள்.

நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, ‘பணத்தை எடுத்துச் செல்கிற போது பாதுகாப்பு பிரச்னை, கடைகளில் கூட்ட நெரிசல் என நடைமுறைச் சிக்கல்களை நாங்களும் பல முறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டோம். ஆனால் ஏன் தெரியவில்லை, இந்த விஷயத்தில் காது கொடுக்கவே மறுக்கிறார்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து உயரதிகாரிகளைக் கேட்டால்,

`அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த விஷயத்தில் பரிந்துரைதான் செய்ய முடியும்’ என முடித்துக் கொண்டார்கள்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க