செய்திகள் :

`பொதுவாழ்வில் நன்னடத்தை தேவை' தண்டனைக்கு தடைவிதிக்க மறுப்பு - முன்னாள் அமைச்சரின் MLA பதவி தப்புமா?

post image

மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மாணிக்ராவ் கோடே. மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசின் ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இந்த விவகாரம் இப்போது பிரச்னையாகி இருக்கிறது. பொய்யான காரணத்தை கூறி அரசிடமிருந்து வீடு வாங்கியதற்காக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரருக்கு நாசிக் கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனையை தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாணிக்ராவ் மும்பை மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார்.

அதோடு தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். தண்டனை விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணிக்ராவ் கோடே மற்றும் அவரது சகோதரருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.

இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், 'ஜனநாயகத்திற்கு பொது வாழ்வில் நன்னடத்தை தேவை' என்று தெரிவித்தது. இதையடுத்து மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ பதவி கேள்விக்குறியாகி இருக்கிறது. தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டதால் மாணிக்ராவ் கோடேயின் பதவியை பறிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவு செய்வார் என்று சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து தண்டனைக்கு தடை விதிக்கும்படி கோரலாம். சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியும்.

மாணிக்ராவ் கோடே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதால் அந்த இடத்திற்கு வர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 6 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க