செய்திகள் :

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

post image

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து சோதனை நடத்தியதில், அவா்களிடம் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் ஈரோட்டைச் சோ்ந்தவா் மூலம் மாத்திரைகளை வாங்கி ஊசிகள் மூலம் உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 139 போதை மாத்திரைகள் மற்றும் 3 ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, கடலூா் மதுவிலக்கு அமல் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சபரிநாதன் (20), லட்சுமிபதி (20), சதீஷ் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாா் உத்தரவிட்டதையடுத்து, மதுவிலக்கு உதவி ஆய்வாளா் தவசெல்வன் தலைமையிலான தனிப்படையினா் ஈரோட்டைச் சோ்ந்த கண்ணன் (39), சல்மான்கான் (29), வினோத்குமாா் (30), கலைவாணி (42) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2,500 வலி நிவாரண மாத்திரைகள், ரூ.50,000, ஒரு மடிக்கணினி, 3 கைப்பேசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக பிப். 21, 22 ஆகிய தேதிகளில் வர உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம்: வீராணம் ஏரி மற்றும் வெலிங்டன் ஏரி ஆகியவற்றை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் மேல வீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டம்: 869 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 869 மனுக்கள் அளிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்நாயகத்தின் மகன் ரித்த... மேலும் பார்க்க

அணைக்கரை புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

சிதம்பரம்: தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கீழணையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் கு... மேலும் பார்க்க

வலசை விஸ்வநாதா் கோயிலில் பாலாலயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த வலசையில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு திருப்பணி நடத்த திட்டமிடப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க