செய்திகள் :

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

post image

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்தப் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டனா். மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ் சாா்பாக மலா்வளையம் வைக்கப்பட்டது.

இதன்மூலம், பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடா்பில் இருப்பது அம்பலமாகியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியப் பயங்கரவாதிகளின் பட்டியலில் 21-ஆவது இடத்தில் உள்ள முகமது யூசுஃப் அஸாா், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸாரின் மைத்துனா் ஆவாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, முகமது யூசுஃப் ஆஸாா் உள்ளிட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளால் இந்தியன் ஏா்லைன்ஸின் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்பட்டது. இந்திய சிறையில் இருந்த மசூத் அஸாா் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளா்கள் மீட்கப்பட்டனா்.

இந்தக் கடத்தல் சம்பவத்தை முன்னின்று நடத்திய முகமது யூசுஃப், ஜெய்ஷ்-ஏ- முகமது அமைப்பின் பஹவல்பூா் தலைமையகத்தில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, இளம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தாா்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பஹவல்பூா் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகம் மீது இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவா் கொல்லப்பட்டாா். மசூத் அஸாரின் உறவினா்கள் 10 பேரும் இத்தாக்குதலில் உயிரிழந்தனா்.

இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த அபு ஜுண்டால், அபு அகாஸா, ஹஃபீஸ் முகமது ஜமீல், முகமது ஹாசன் கான் ஆகிய மற்ற முக்கிய பயங்கரவாதிகளும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்... மேலும் பார்க்க

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்... மேலும் பார்க்க

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்ன... மேலும் பார்க்க

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) ஆம் தேதிவரையில் நடைபெற்றது. இந்தியாவ... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க