செய்திகள் :

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

post image

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான   ஆனந்தகுமார் (29) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஆனந்தகுமாருக்கும், மகேஸ்வரிக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதியன்று மாலை இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.

ஆறுமுகம்
ஆறுமுகம்

அப்போது மகேஸ்வரி மேலும் மது வேண்டும் என கேட்டு தொல்லை கொடுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த ஆனந்தகுமார் மதுவில் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மது அருந்திய மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆனந்தகுமார் அவரது அப்பா ஆறுமுகம் மற்றும் உறவினர் சுப்பிரமணி ஆகியோரிடம் கூறியுள்ளார். அங்கு வந்த அவர்கள் உதவியுடன் ஆனந்தகுமார் வெள்ளை நிற பையில் மகேஸ்வரியின் உடலை போட்டு, மோட்டார் பைக்கின் முன்புறம் வைத்து அதன் மேல் மீன் வலையை போட்டு மூடி எடுத்து சென்றுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து மகேஸ்வரியின் உடலை நொய்யல் ஆற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

இந்த நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்றில் பெண் சடலம் கிடப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தகுமாரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது, மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகேஸ்வரியை கொலை செய்து செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆனந்தகுமார், ஆறுமுகம், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

வருங்கால கணவனை கொலை செய்யும் முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி: சிக்னல் கொடுத்தவுடன் தள்ளிவிட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலைய... மேலும் பார்க்க

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு ... மேலும் பார்க்க

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ள... மேலும் பார்க்க

பெங்களூரு : தாய், தந்தை, சகோதரியை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

பெற்றோர், சகோதரி உள்ளிட்ட மூன்று பேரை, மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் எஞ்சினியரான சோம... மேலும் பார்க்க

கல்பாக்கம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும... மேலும் பார்க்க