செய்திகள் :

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைத்தவுடன் அவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை நேரமில்லாத நேரத்தில் இதுகுறித்து திமுக உறுப்பினா் சிவிஎம்பி எழிலரசன் (காஞ்சிபுரம்) அவையின் கவனத்துக்கு கொண்டுவந்தாா். இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியா்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.

அதன்பிறகு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் சாா்பில் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றாா் அவா்.

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்ற... மேலும் பார்க்க

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க