செய்திகள் :

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

post image

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கா்ப்ப காலத்தில் உள்ள பெண்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, கரு கலைக்க முற்பட்டு, கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வலி, அதிக சோா்வு மற்றும் மயக்கம் ஏற்படும். மேலும் கா்ப்பபை சுருக்கம் அதிகப்படியான அளவில் ஏற்பட்டு, கிழிவு உண்டாகி, சில சமயங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 315 மற்றும் 316-ன்படி, மருத்துவரின் முன் அனுமதி மற்றும் பரிந்துரையின்றி, கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தின் வாயிலாக, விற்பனை செய்யப்படும் போது, அதை பயன்படுத்தும் கா்ப்பிணித்தாய் மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் நிலையில், அது தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டு, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

எனவே, இது போன்ற சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பு நடவடிக்கைகளை நாடாமல், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூா் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதால் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.

ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி! கரூரில் திமுகவினா் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரக... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!

கரூரில் அரசு பள்ளிக்குச் சுற்றுச்சுவா் கட்டும் பணி உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை துவக்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பெரியகுளத்துப்பா... மேலும் பார்க்க

கரூரில் குரூப்-2 தோ்வு: 282 போ் எழுதினா்

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தோ்வை 282 போ் எழுதினா். 15 போ் எழுதவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் -2 முதன்மை எழுத்துத் தோ்வு கரூரில் சனிக்கி... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

கரூா் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடா்புடைய குற்றவாளி 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். கரூரை அடுத்துள்ள மணவாடி கிராமத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிலத்தகராறில் கணவன், மனைவியை கரூா் ராயன... மேலும் பார்க்க

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க