செய்திகள் :

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

post image

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே சில தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகியுள்ளன.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்

முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை தொடர்ந்து மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், தாராபுரம் தற்போது விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு சில மாதங்களில் இந்த எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான பலப்பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விஜயபாஸ்கரின் விலகல் அதிமுகவின் சட்டப்பேரவை பலத்தை மேலும் குறைத்துள்ளதுடன் கட்சிக்குள் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க

"திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்"- தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். ம... மேலும் பார்க்க

”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்... மேலும் பார்க்க

'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக... மேலும் பார்க்க