செய்திகள் :

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

post image

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறியிருக்கிறார். பின்னர் தங்கக் காசு சேமிப்பு திட்டம் குறித்தும் வங்கி ஊழியரிடம் விரிவாக பிரபுமணி கூறியிருக்கிறார். அதனால் வங்கி ஊழியரும் 89,32,782 ரூபாயை தங்க காசுக்காக முதலீடு செய்திருக்கிறார். ஆனால் தங்க காசுகளை கொடுக்காமல் வங்கி ஊழியரை பிரபுமணி ஏமாற்றி வந்திருக்கிறார். அதனால் வங்கி ஊழியர், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகாரளித்தார். ஆனால் அந்தப் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் வங்கி ஊழியரைப் போல காவல்துறையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களையும் பிரபுமணி தரப்பு ஏமாற்றியிருக்கிறது. அதனால் அவர்களும் பிரபுமணி மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகாரளித்தனர். ஆனாலும் சில மேலிட பிரஷர் காரணமாக பிரபுமணி மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரபுமணி

இதையடுத்து பிரபுமணியிடம் தங்க காசுக்காக பணத்தை இழந்தவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதன்பேரில் பிரபுமணி மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் அளித்த புகாரில் பிரபுமணிக்கு உடந்தையாக செயல்பட்டது ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி என்று குற்றம் சாட்டியிருந்தனர். அதனால் இந்த வழக்கில் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவராக இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த மோசடி பின்னணி குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பிரபுமணி, சென்னை கொளத்தூரில் அலுவலகம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, அவருக்கும் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இருவரும் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த போலீஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியிருக்கிறார்கள். இதில் வங்கி ஊழியரிடம் மட்டும் 90 லட்சம் ரூபாய் வரை பிரபுமணி வாங்கியிருக்கிறார். பின்னர் 27 லட்சம் ரூபாய் வரை திருப்பி கொடுத்திருக்கிறார். மீதியுள்ள பணத்தைக் கொடுக்காமல் பிரபுமணி ஏமாற்றி வந்திருக்கிறார். இதுதொடர்பான புகாரின் பேரில்தான் பிரபுமணி மீது வழக்கு பதிவு செய்தோம். இந்த வழக்கில் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியையும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்த்திருக்கிறோம். இதுதவிர பிரபுமணியின் உதவியாளர் செந்தில், பிரபுமணி நிறுவனத்தில் வேலை செய்த கல்பனா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியிடம் விசாரணை நடத்தப்படும்.

கைது
கைது

இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியைத் தவிர இன்னும் சில அதிகாரிகளும் இந்த மோசடிக்குப் பின்னணியில் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரபுமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். அவரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது லட்சக்கணக்கான பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுதவிர தீபாவளி பண்ட் நடத்தி வந்திருக்கிறார் பிரபுமணி. கடந்த ஆண்டு தீபாவளியின் போது தீபாவளி பண்டில் சேர்ந்தவர்களுக்கு தங்க காசு, மளிகை பொருள்கள், பட்டாசுகளை கொடுப்பதில் பிரபுமணிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர், வங்கியில் லோன் போட்டு அந்தப் பணத்தை பிரபுமணியிடம் கொடுத்திருக்கிறார். இதுதவிர வடசென்னையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளில் சிலர், பிரபுமணியின் தங்க காசு முதலீடு திட்டத்தில் சேர்ந்து பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் விவரங்களையும் சேகரித்திருக்கிறோம். இதுவரை 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பிரபுமணியிடம் பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் அடுத்தடுத்து புகாரளித்து வருவதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றனர்.

இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி

இன்ஸ்பெக்டர் ஷீலாராணியின் பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``இவர், 2004-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். 2023-ம் ஆண்டு முதல் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி வடசென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் பணியாற்றிய போது அவருக்கு கொளத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுமணியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அக்காள், தம்பியாக இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் தங்க காசு முதலீடு திட்டம், தீபாவளி பண்ட், ரியல் எஸ்டேட் ஆகிய பிசினஸ்களில் பிரபுமணிக்கு இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். பிரபுமணியிடம் போலீஸ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தங்க காசு முதலீடு திட்டத்தில் சேர, இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியும் ஒரு காரணம். ஷீலாமேரியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் சில முக்கிய தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அந்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பிரபுமணி, இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி ஆகியோருடன் மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களும் தற்போது பீதியிலிருக்கிறார்கள்'' என்றனர்.

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க

போலீஸிடம் இருந்து தப்பிக்க 4-வது மாடி சன்ஷேடில் பதுங்கிய திருடர்; கீழே விழுந்து பலியான சோகம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யராஜ் (21). மாணவரான இவர் எர்ணாகுளம் கம்மட்டிப்பாடம் ஸ்டார்ஹோம்ஸ் அபார்ட்மென்ட் அருகில் வாடகைக்குத் தங்கி லாஜிஸ்டிக்ஸ் படிப்பு படித்து வருக... மேலும் பார்க்க

லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட கவுரிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக (ஏ.இ) பணிபுரிந்து வந்தவர் பத்மாவதி. இவர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவரி... மேலும் பார்க்க