செய்திகள் :

விரைவில் ராஜினாமா செய்யும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - கட்சியிலிருந்தும் விலக முடிவு!

post image

அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர்,

தலைமை என்பது

அதிகாரமோ, ஆணவமோ அல்ல…

‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை

வெல்ல முடியாத தலைமை,

மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில்

உண்மையான பயணம் சாத்தியமா?

என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதோடு, அதிமுகவில் இருந்தும் விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின், அவர் மாற்று கட்சியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாற்று கட்சியில் இணைவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வரும் விஜயபாஸ்கரை, தவெகவில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

"மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" - அதிமுக-விலிந்து விலகுகிறாரா எம்எல்ஏ விஜயபாஸ்கர்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல... மேலும் பார்க்க

"திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்"- தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திமுகவிற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். ம... மேலும் பார்க்க

”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்... மேலும் பார்க்க

'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக... மேலும் பார்க்க

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தவிர நேற்று சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல பாலியல் சம்வங்கள் அரங்கேறி இருக... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்த சபாநாயகர்!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.CM Vijayஇந்நிகழ்வில் பேசிய ச... மேலும் பார்க்க