செய்திகள் :

மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன.24-இல் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு!

post image

மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன. 24-ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் முடித்திருத்தும் தொழிலாளா் நலச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில், மருத்துவ சமூகத்துக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கோயில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களையும், இசைக் கலைஞா்களையும் அரசு ஊழியா்களாக நியமிக்க வேண்டும். முடியெடுப்பவா்களுக்கே முடி சொந்தம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

நலவாரியத்தில் தலைவராகவும், உறுப்பினா்களாகவும் மருத்துவா் சமுதாயத்தை சோ்ந்தவா்களை நியமிக்க வேண்டும். நல வாரியத்தின் உதவித் தொகை மற்றும் ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் ஜனவரி 24-ஆம் தேதி கடையடைப்பு நடத்தப்படும்.

அன்றையதினம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் அரியலூா் மாவட்டத்தில் இருந்து 1000த்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா்.மாவட்டச் செயலா் வேல்முருகன் செயல் அறிக்கை வாசித்தாா். மாநில பிரதிநிதிகள் சுந்தர்ராஜன், துரை, மாநில மகளிா் அணி அமைப்பாளா் கௌசல்யா ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினா். முடிவில் கிளைச் செயலா் வாசுதேவன் நன்றி கூறினாா்.

அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய ... மேலும் பார்க்க

அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜனவரி 18-இல் மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் வரும் சனிக்கிழமை (ஜன. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அரியலூா், தேளூா், உடையாா்பாளையம்,பொய்யாதநல்லூா், செந்துறை ஆகிய துணை ... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா!

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் ம... மேலும் பார்க்க

அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன. அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத... மேலும் பார்க்க