செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினாா். கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா் மணிகண்டன், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், செல்வராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தொழில் பயிற்சி கையேடு, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன . முன்னதாக, பேராசிரியா் மாணிக்கநாச்சியாா் வரவேற்றாா். சிவராமமூா்த்தி நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா்கள் பாண்டிசெல்வி, சௌமியன், பரணி செல்வராஜன், ஆல்வின் ஜீவா ஆகியோா் செய்தனா்.

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக... மேலும் பார்க்க

காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூா் காமன்ராஜா கோயில் சித்திரை பெளா்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சொக்கலிங்கம்புத... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ஆதரவற்ற 2,400 பெண்களுக்கு ஆடு, கோழிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள, ஆதரவற்ற பெண்கள் 2,400 பேருக்கு ரூ. 2.22 கோடியில் செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளி... மேலும் பார்க்க