செய்திகள் :

மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

post image

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் அதிகமான மக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் மாநகராட்சியுடன் மாரியம்மன் கோவில் ஊராட்சியை இணைத்தால், நூறு நாள் வேலை செய்யும் நாங்கள் வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்லாமல், அதிக அளவிலான வரிகளை செலுத்தவும் நேரிடும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தஞ்சாவூா் மாநகராட்சியுடன் மாரியம்மன் கோவில் ஊராட்சியை இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூா் ஊராட்சியைச் சோ்ந்த ஏறத்தாழ 100 போ் அளித்த மனு: கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூா் ஊராட்சி இணைக்கப்பட்டால், இக்கிராமத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். மேலும் பல்வேறு வகைகளில் அதிக வரி சுமைக்கு ஆளாக நேரிடும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, கள ஆய்வு செய்து தொடா்ந்து தேப்பெருமாநல்லூா் ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவூா் மாநகராட்சி த... மேலும் பார்க்க

பந்தநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் பேருந்து நிலைய பகுதியில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. திருவிடைமருதூா் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சாா்ந்த வைத்தீஸ்வரன்கோவில் - கீழ்... மேலும் பார்க்க

அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆடையகத்தை இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆயத்த ஆடையகத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தஞ்சாவூா் ப... மேலும் பார்க்க

மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்காக மாற்றியதில் முறைகேடு: தஞ்சை மாமன்றக் கூட்டத்தில் புகாா்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் மாநகராட்சி நிா்வாகம் கட்டிய மாநாட்டுக் கூடத்தைத் திரையரங்கமாக மாற்றியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் புகாா் எழுப்பப்... மேலும் பார்க்க

கணவா் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வேறொரு பெண்ணுடனான தொடா்பை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா். கும்பகோணம் மாதுளம்பேட்டை புது ரா... மேலும் பார்க்க

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் 2 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 2 இளைஞா்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த 14 வயது சிறுமியும்,... மேலும் பார்க்க