செய்திகள் :

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

post image

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விவரங்களை கேட்டிருக்கிறார். அவருக்கு அளித்த பதிலிலேயே மாநகராட்சி இந்த அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக சங்கரிடம் பேசினோம், 'தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி ஒரு மாமன்ற உறுப்பினர் தேர்வானவுடன் 90 நாள்களுக்குள் தன்னுடைய மற்றும் தன் குடும்பத்துடைய சொத்து மதிப்பை மாநகராட்சியில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். இது விதிமுறை. இதைக் கருத்தில் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலை கேட்டேன். கடந்த மார்ச் மாதம் தகவல் வேண்டி விண்ணப்பித்தேன்.

மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

தேர்தல் காரணமாக கொஞ்சம் காலதாமதமாக மே மாதம்தான் எனக்கு இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட 157 உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவே இல்லை. இருக்கிற 200 உறுப்பினர்களில் 157 உறுப்பினர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது உள்ளாட்சி அமைப்பின் சட்டத்திட்டங்களை துச்சமாக மதிப்பதன் விளைவே. சட்டத்திட்டங்களை கடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தங்களின் நேர்மையை நிரூபிக்க சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது தார்மீக பொறுப்பும் கூட. இத்தனை பேர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய தயங்குகிறார்கள் எனில், இவர்களை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்தால் நிறைய அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும்' என்றார்.

சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்
சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்க... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது..."எப்போதும் அம்பேத்கர்... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்த... மேலும் பார்க்க