மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்ட 682 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.
3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.24 லட்சம் மதிப்பிலான நல உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் முகுந்தன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மஞ்சுளா, தாட்கோ மாவட்ட மேலாளா் ரமேஷ்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.