செய்திகள் :

'மீண்டும் ஒன்று சேரலாம் வா...' - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

post image

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சிங் திடீரென தனது முன்னாள் மனைவியிடம் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும், சமரசம் பேச நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பிய சரோஜ் அவர் அழைத்த இடத்திற்கு சென்றார். பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தில் புதர்களுக்கு அருகில் உள்ள ஒதுங்கிய பகுதிக்கு குர்மீத் தனது முன்னாள் மனைவியை அழைத்துச் சென்றார்.

அங்கு கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தால் சரோஜை கொன்றுவிட்டு உடலை வயல்வெளியில் புதைத்துவிட்டார். இக்கொலையின் போது சரோஜ் சத்தம் கேட்டு அருகில் ஆடு மேய்க்கும் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் வருவதை பார்த்த குர்மீத் அவசர அவசரமாக சரோஜ் உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆடு மேய்ப்பவர் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே கிராம மக்கள் போலீஸாரின் துணையோடு சரோஜ் உடலை தோண்டி

எடுத்தனர். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டிக்கொண்டனர். கைது செய்யப்பட்ட குர்மீத்திடம் என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க