செய்திகள் :

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை 90 பைசா ஏற்றம்; சென்னையில் எவ்வளவு? 3 நாள்களில் இரண்டு முறை ஏற்றம்!

post image

ஈரான் போர் தொடங்கி 2 மாதங்கள் 21 நாள்கள் ஆகின்றன.

அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை இன்னும் மூடியே வைத்திருக்கிறது ஈரான்.

இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வந்து செல்வதிலும் பிரச்னை நீடித்துக்கொண்டே வருகிறது.

ஈரான் போர் தொடங்கிய உடன் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஏறினாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட 2 மாதங்களாக ஏற்றப்படவில்லை.

கேஸ் சிலிண்டர்களின் விலை மட்டுமே ஏற்றப்பட்டது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

ஆனால், ஈரான் போருக்கு ஒரு 'எண்ட் கார்டு' வராததால், கடந்த வெள்ளிக்கிழமை (மே 15), 3 ரூபாயை பெட்ரோல், டீசல் விலையில் உயர்த்தியது இந்திய எண்ணெய் நிறுவனங்கள்.

தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது எண்ணெய் நிறுவனங்கள். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு கிட்டத்தட்ட 90 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்குள் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இன்றைய விலைப்படி,

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.49 (82 பைசா விலை ஏற்றம்) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.11 (86 பைசா விலை ஏற்றம்) ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

’விசுவாசம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்!’ –காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிடுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் பறிபோன பின்னர், அரசியல் விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலர் தங்களது நாவைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்..."- ட்ரம்ப் அறிவிப்பு

"ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகமாகச் செயல்படுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் அவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். நேரம் மிக மிக முக்கியமான... மேலும் பார்க்க

"இது உ.பி அல்ல; புல்டோசர் கலாசாரத்தை அனுமதிக்காதீர்" - மகாராஷ்டிரா அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் திடீரென ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கவுன்சிலர் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது. கவுன்சிலர் மதீன் பட்டேல் மற்றும் கனீப் கான் ஆகியோரது... மேலும் பார்க்க