செய்திகள் :

'முதலீட்டாளர்களிடம் திமுக அரசு பணம் கேட்டதா?' - கவனம் பெறும் ஆந்திர அமைச்சரின் ட்வீட்!

post image

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டன என்கிற பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம் (ஜூன் 22), ''திமுக ஆட்சியில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் குஜராத்திற்குச் சென்றன. டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் கர்நாடகாவிற்குச் சென்றது'' என்று சில நிறுவனங்களைப் பட்டியலிட்டார்.

கீர்த்தனா - டி.ஆர்.பி.ராஜா
கீர்த்தனா - டி.ஆர்.பி.ராஜா

இதற்குப் பதிலளிக்கும் விதமான நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

இந்த நிலையில், ஆந்திரா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷின் எக்ஸ் தளப் பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.

அதில் நாரா லோகேஷ், "அரசியல் என்பது எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் பேசினேன்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் நாங்கள் மிகக் கடுமையாகப் போட்டியிட்டோம். சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம்.

ஆனால், முதலீட்டாளர்கள் யாரும் தங்களிடம் அரசு பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

பாராட்ட வேண்டிய விஷயங்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். திமுக அரசு முதலீட்டு செயல்முறைகளை மிகவும் சுத்தமாகவும், தொழில்முறையாகவும் நடத்தியது.

அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வர வேண்டும்' - அமெரிக்க செனட்டின் செக்; ட்ரம்புக்கு நெருக்கடி

ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது அமெரிக்க நாடாளுமன்றம். நிறைவேற்றம்ஆம்... நேற்று ஈரான் போரை நிறுத்துமாறு ட்ரம்பிற்கு வலியுறுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளு... மேலும் பார்க்க

"நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் விஜய்யின் பதவியேற்பு விழாவே நடத்திருக்காது" - பெ.சண்முகம் கடும் தாக்கு | Live Updates

விஜய்-க்கு பெ.சண்முகம் பதிலடிநேற்று (ஜூன் 23, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், "தாங்கள் யார் தயவிலும் ஆட்சி அமைக்கவில்லை" என்று பேசியிருந்தார்.நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்ச... மேலும் பார்க்க

'மனுவை அப்லோட் பண்ணா அப்பாயின்மென்ட் போனுக்கே வந்திடும்' - அமைச்சர் ராஜ்மோகன் அறையில் புதிய முயற்சி!

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ் மோகனின் அறைக்கு வெளியே டிஜிட்டல் முறையில் மனுக்களைப் பெறும் வகையில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.அறைக்கு வெளியே வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மேயர் சவரணன் தலைமையில் நடந்தது. தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கத... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற முதலீடுகள்' பட்டியலிட்ட கீர்த்தனா; ஏன் சென்றன? - TRB ராஜா விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் சென்ற முதலீடுகள் எ... மேலும் பார்க்க