செய்திகள் :

முதல்வர் விஜய்-யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்… அரசாணை வெளியீட்டில் எழும் கேள்விகள்!

post image

தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், அந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய விதம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்த காலத்திலிருந்தே விஜயின் நெருங்கிய உதவியாளரும் மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர்கள் நடிகைகளுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான The Route-இன் நிறுவனராக அறியப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜயின் திரைப்பட மற்றும் பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வந்த அவர், தவெக தொடங்கப்பட்ட பிறகும் விஜயின் மேலாளராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளான நேற்று , அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ள ஜெகதீஷ் பழனிசாமி, தாம் முதல்வரின் தனிச் செயலாளராக (அரசியல்) நியமிக்கப்பட்டுள்ளதாக அவரே அறிவித்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற சில மணி நேரங்களிலேயே, அதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியாகியது.

ஆனால், வெளியிடப்பட்ட அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்தது. நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக கடந்த நிலையில், அதுகுறித்த அரசாணை ஜெகதீஷ் பழனிசாமியின் தனிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகே பொதுவெளியில் வெளியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வரின் நெருங்கிய உதவியாளருக்கு அரசு பதவி வழங்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதுகுறித்த தகவல் முதலில் அதிகாரப்பூர்வ அரசு வழிகளில் அல்லாமல், சமூக வலைதள பதிவு மூலம் வெளிவந்ததும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தி வந்த தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த நியமனத்துக்கான அரசாணை பின்னர் திரும்பப் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராதன் பண்டிட் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகிய இரண்டு நியமனங்களுகான அரசாணை ஒரே தேதியில் நடைபெற்றிருந்தாலும் ராதன் பண்டிட் அரசாணை மட்டுமே அப்போது வெளியானது.

தமிழக அரசியலில் முதல்வர்களின் நெருங்கிய உதவியாளர்கள் அரசு பதவிகளில் நியமிக்கப்படுவது புதிய நடைமுறை அல்ல. கடந்த திமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் உதவியாளராக இருந்த தினேஷ்குமார், முதல்வரின் தனிச் செயலாளராக அரசு பதவியில் நியமிக்கப்பட்டு, ஆட்சி முழுவதும் அந்தப் பொறுப்பில் செயல்பட்டார் ( தினேஷ்குமார் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை கடைசி வரை வெளியாகவில்லை) இதனால் முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்களுக்கு இதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது தமிழக அரசியல் நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறையாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்தைச் சுற்றியுள்ள விவாதம், நியமனத்தின் தன்மையை விட அதுகுறித்த தகவல் வெளியிடப்பட்ட விதம் மற்றும் அரசாணை வெளியீட்டின் காலதாமதம் தொடர்பாகவே அதிக கவனம் பெற்றுள்ளது.

கத்தார் கேஸ் ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?

கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!முதல்வர் விஜய்சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலா... மேலும் பார்க்க

பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!

பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.பிரிட்டன் அரசியலில் பெரும் தி... மேலும் பார்க்க

4 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக வழக்கு; பிரகாஷ்ராஜுக்கு பிடிவாரண்டா?உண்மை என்ன?

நான்கு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நட... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாரணையில், ''தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப... மேலும் பார்க்க

சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.சபரீசன்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவையில் உரையாற்றியிருந்தார். அவர் பேசுவ... மேலும் பார்க்க