செய்திகள் :

பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!

post image

பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.

பிரிட்டன் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் அடுத்த தலைவராகவும், பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஆண்டி பர்ன்ஹாம்
ஆண்டி பர்ன்ஹாம்

யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?

வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 1970-ல் பிறந்து வளர்ந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, தனது 15 வயதிலேயே லேபர் கட்சியில் இணைந்தவர் ஆவார்.

2001-ல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான இவர், தொடர்ந்து டோனி பிளேயர் மற்றும் கார்டன் பிரவுன் அமைச்சரவைகளில் உள்துறை, நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய முக்கிய அமைச்சகங்களில் மூத்த பொறுப்புகளை வகித்தார்.

பின்னர் 2008-ல் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும், 2009-ல் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை (NHS) நிர்வகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் உயர்ந்தார்.

ஆண்டி பர்ன்ஹாம்
ஆண்டி பர்ன்ஹாம்

2017 முதல் 'கிரேட்டர் மான்செஸ்டர்' பகுதியின் மேயராகப் பணியாற்றியபோது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, பிரிட்டன் மத்திய அரசுக்கு இவர் மேற்கொண்ட சமரசமற்ற போராட்டங்களினால் "கிங் ஆஃப் தி நார்த் (King of the North)" என்று பரவலாக அறியப்பட்டார்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 55% வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ள ஆண்டி, இதற்கு முன்னர் 2010-ல் எட் மிலிபாந்திடமும், 2015-ல் ஜெரெமி கார்பினிடமும் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

எனினும், தனது தொடர் அரசியல் போராட்டங்கள் மூலம் தற்போது பிரிட்டனின் அடுத்த பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கத்தார் கேஸ் ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?

கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!முதல்வர் விஜய்சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலா... மேலும் பார்க்க

4 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக வழக்கு; பிரகாஷ்ராஜுக்கு பிடிவாரண்டா?உண்மை என்ன?

நான்கு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நட... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்-யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்… அரசாணை வெளியீட்டில் எழும் கேள்விகள்!

தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், அந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய விதம் அரசியல் வட்டாரங்... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாரணையில், ''தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப... மேலும் பார்க்க

சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.சபரீசன்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவையில் உரையாற்றியிருந்தார். அவர் பேசுவ... மேலும் பார்க்க