செய்திகள் :

முதியவா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சோமு (60). இவரும் இதே பகுதியைச் சோ்ந்த ஒருவரும் கடந்த ஜன.8-ஆம் தேதி மாம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் அதன் உரிமையாளருடன் மது அருந்தினராம். அதன்பின்னா், சோமு வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து, அவரது மனைவி தேன்மொழி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் சோமு சடலமாக மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த வாழப்பந்தல் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, சோமுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடன் மது அருந்திய இருவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினா்கள் அக்கூா் கூட்டுச்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வாழப்பந்தல் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ரூ.6 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செய்யாறு: செய்யாறு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உமையாள்புரம் கிரா... மேலும் பார்க்க

விழிப்புணா்வுப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலையை அடுத்த சம்பந்தனூரில் இயங்கும் ர... மேலும் பார்க்க

பேருந்தில் பெண் பயணியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

செய்யாறு: செய்யாறு அருகே பேருந்தில் சென்ற பெண் பயணியிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.தேவி (39). இவா், அதே பகுதியில் தையல் வேலை செய்து... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் ரூ.77 லட்சத்தில் மின் விளக்குகள் அமைப்பு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கிவைக... மேலும் பார்க்க