செய்திகள் :

மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?

post image

மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.

அவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து அவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் பவாய் ஏரியில் சித்தார்த் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீஸார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் தலையில் அடித்த காயம் இருந்தது.

சிறுவனின் சடலம்
சிறுவனின் சடலம்

கடைசியாக சிறுவனோடு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுடன் காணப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மைனர் சிறுவனை அழைத்துச்சென்று விசாரித்தபோது அவன்தான் தனது நண்பர்களோடு சேர்ந்து சித்தார்த்தைக் கொலை செய்தது தெரிய வந்தது. 3 மைனர் சிறார்கள் சேர்ந்து சித்தார்த்தை தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சித்தார்த்தை 3 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து இக்கொலையில் தொடர்புடைய மேலும் 2 சிறார்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது சித்தார்த் அவர்களை மோசமாக நடத்தியதால் கோபத்தில் அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர். 3 பேரும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட... மேலும் பார்க்க

திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!

டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விசர்ஜீத் என்ற நபரை காதலித்து வந்தார். விசர்ஜீத் அடிக்கடி தனது காதலியை சந்திக்க டெல்லி வருவது வழக்கம். இரண்டு... மேலும் பார்க்க

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீ... மேலும் பார்க்க

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந... மேலும் பார்க்க