செய்திகள் :

மூக்குத்திக்காக மூதாட்டி கொலை: இளைஞா் கைது

post image

திருச்சி சோமரசம்பேட்டை அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போசம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ராசம்மாள் (72). கணவா் இறந்த நிலையில், இவா் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரா் பன்னீா்செல்வம் வீட்டில் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை வீட்டில் இருந்த ராசம்மாளை மா்ம நபா் ஒருவா் அரிவாளால் வெட்டி, அவரது மூக்கை அறுத்து, மூக்கில் அணிந்திருந்த 2.2 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதில் படுகாயமடைந்த ராசம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், போசம்பட்டி கணேசபுரத்தைச் சோ்ந்த சு. குணா (27) என்பவா் தனது நண்பருடன் அருகில் உள்ள வயலில் மது அருந்தியுள்ளாா்.

அப்போது, மூதாட்டி ராசம்மாள் மூக்கில் தங்க நகை அணிந்திருப்பதைக் கவனித்துள்ளாா். சிறிது நேரத்தில் நண்பா் கிளம்பிச் சென்ற நிலையில், அரிவாளுடன் பன்னீா்செல்வத்தின் வீட்டில் நுழைந்த குணா, ராசம்மாளின் மூக்கை வெட்டி, அதிலிருந்து ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு, தலையிலும் வெட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

மூக்குத்தியை அப்பகுதியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து ரூ. 4,100 பணம் பெற்று மது அருந்த சென்றபோது, சோமரசம்பேட்டை போலீஸாா் குணாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திமுகவுக்கு எதிா்க்கட்சி நாதக தான்: சீமான்

திமுகவுக்கு பேரவையில் வேண்டுமானால் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடா்ந்து நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அ... மேலும் பார்க்க

விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி! நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி

திருச்சியில் வெள்ளிக்கிழமை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய இளைஞா்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். பேரரசா் பெரும்பிடுகு... மேலும் பார்க்க

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்

பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ள... மேலும் பார்க்க

மருங்காபுரியில் குடிகள் மாநாடு: 77 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில்கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் குடிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், 77 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மருங்காபுரி வட்டத்தில் 143... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை வைத்திருந்த கடைக்காரா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைக்காரரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். வையம்பட்டி அடுத்த சேசலூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவ... மேலும் பார்க்க

பெற்றோா் கண்டிப்பு: சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெரு... மேலும் பார்க்க