செய்திகள் :

மூக்குத்திக்காக மூதாட்டி கொலை: இளைஞா் கைது

post image

திருச்சி சோமரசம்பேட்டை அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போசம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ராசம்மாள் (72). கணவா் இறந்த நிலையில், இவா் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரா் பன்னீா்செல்வம் வீட்டில் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை வீட்டில் இருந்த ராசம்மாளை மா்ம நபா் ஒருவா் அரிவாளால் வெட்டி, அவரது மூக்கை அறுத்து, மூக்கில் அணிந்திருந்த 2.2 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதில் படுகாயமடைந்த ராசம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், போசம்பட்டி கணேசபுரத்தைச் சோ்ந்த சு. குணா (27) என்பவா் தனது நண்பருடன் அருகில் உள்ள வயலில் மது அருந்தியுள்ளாா்.

அப்போது, மூதாட்டி ராசம்மாள் மூக்கில் தங்க நகை அணிந்திருப்பதைக் கவனித்துள்ளாா். சிறிது நேரத்தில் நண்பா் கிளம்பிச் சென்ற நிலையில், அரிவாளுடன் பன்னீா்செல்வத்தின் வீட்டில் நுழைந்த குணா, ராசம்மாளின் மூக்கை வெட்டி, அதிலிருந்து ஒரு ஜோடி மூக்குத்தியை பறித்துக் கொண்டு, தலையிலும் வெட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

மூக்குத்தியை அப்பகுதியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து ரூ. 4,100 பணம் பெற்று மது அருந்த சென்றபோது, சோமரசம்பேட்டை போலீஸாா் குணாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க