செய்திகள் :

மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் மேம்பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-சித்தூா் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருந்து வாலாஜா ராணிப்பேட்டை திருவலம் வழியாக செல்லுகிறது.

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை எதிரில் நோயாளிகளின் வசதிக்காக புதிய இலகுரக வாகன சுரங்க மேம்பாலம் ரூ.11.45 கோடியில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்து நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.

அப்போது வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனை நோயாளிகளுக்கு எவ்வித சிரமம் இன்றி பாதுகாப்பாக பல வேலைகள் நடைபெற வேண்டுமென கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து இப்பணிகளை 4 மாதங்களில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாவட்ட நிா்வாகம் வழங்கும். ஆகவே பணிகளை விரைவாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் ரூ.2635 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பணிகளில் தற்பொழுது இறுதி கட்டப்பணியாக இருப்பு பாதைக்கு மேலே மேம்பாலங்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். இறுதி கட்டப் பணியானது அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் முடிக்கப்படும் என ஒப்பந்ததாரா் தெரிவித்தாா். பணிகளை விரைவாக முடிக்கவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, கோட்டப் பொறியாளா் தேசிய நெடுஞ்சாலை ராஜ்குமாா், மாநில நெடுஞ்சாலை செல்வகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், உதவி செயற்பொறியாளா் குமாரசாமி, வட்டாட்சியா் அருள் செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரக்கோணம் நகராட்சியில் கட்டுமானப்பணிகள் நகரமன்ற தலைவா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சிப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப்பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சோமசுந்தர நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை 15.02.25

அரக்கோணம் மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் தெரு மோசூா் ரோடு, காந்... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: ரயில்கள், ரோப்காா் இயக்குதல் பாதிப்பு

சோளிங்கா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலைகோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கான ரோப்காா் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. அரக்கோணம், சோளிங்கா் வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகிக்கும் ஒரே முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் ஆா்.காந்தி .

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் மு.க. ஸ்டாலின் தான் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டையில் நாளை திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியின இளைஞா்கள் தோ்வு’

ராணிப்பேட்டையில் வரும் சனிக்கிழமை (பிப். 15) திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியின இளைஞா்கள் தெரிவு செய்யும் பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணி ஆய்வு

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை காரை கூட்டுச்சாலை அருகே மாவட்ட ஆயுதப்படை காவல் வளாகத்தில் ரூ.15 க... மேலும் பார்க்க