செய்திகள் :

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு; 11.6% வாக்குதான் மம்தாவிற்குச் சவாலா?

post image

தமிழ்நாட்டில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து வருவதுபோல, மேற்கு வங்கத்திலும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தின் அடுத்த கட்ட தேர்தல் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் ஆகும். அதில் 152 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 152 தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.6 கோடி ஆகும்.

தேர்தல்
தேர்தல்

2011-ம் ஆண்டில் இருந்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் மம்தா பானர்ஜிக்கு இது ஒரு டஃப்பான தேர்தல் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக கடுமையாக உழைத்து வருகிறது.

இதே எண்ணத்தோடு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக மேற்கு வங்கத்தில் கடினமாக உழைத்தது.

2021-ன் ஆண்டு ரிசல்ட் படி, திரிணாமுல் காங்கிரஸ் 215 சீட்டுகளை அள்ளியிருந்தது. பாஜக 77 சீட்டுகளில் வெற்றி பெற்றிருந்தது.

இப்படியான வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜியால் வெற்றி பெற முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இதற்கு முக்கியக் காரணம் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மொத்த வாக்காளர் சதவிகிதத்தில் இது 11.6 சதவிகிதம் ஆகும்.

2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் 48 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்போதைய 11.6 சதவிகித வாக்காளர் நீக்கம் மம்தா பானர்ஜிக்குப் பாதகமாக அமையுமோ என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையத்தில் வாக்களித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சென்னையில் இருந்து தென் தமிழகத்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட... மேலும் பார்க்க

"அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால், அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும்" - லெனினை மேற்கோள்காட்டிய SK

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை வளசரவாக்கத்... மேலும் பார்க்க