மொபெட் மீது பைக் மோதல்: உணவக உரிமையாளா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட் மீது பைக் மோதியதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டி (45). இவா், வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி கிராமத்தில் உணவகம் நடத்தி வந்தாா்.
கோட்டி புதன்கிழமை மாலை வேலை முடிந்து மொபெட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற பைக் இவரது மொபெட் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கோட்டி வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.