செய்திகள் :

``மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது" - வைகோ

post image

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக மதிமுக வேட்பாளர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வந்திருந்த பூமிநாதனுடன் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மதுரை தெற்கு தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பூமிநாதன் வெற்றி பெறுவார். பூமிநாதன் இந்த தொகுதி மக்களிடம் எந்த வேற்றுமையும் பாராது, நேர்மையாக நடந்து கொண்டார். இந்த தேர்தல் களத்தில் கசப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கண்ணியமாக பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

படை பட்டாளத்துடன் பிரதமர் வந்தாலும், ஆணவத்தையே சொற்களாக பிரகாசிக்கும் அமித் ஷா என யார்?, எத்தனை முறை வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற போவதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டார்களே, அதே போல மற்றவர்களின் வாகனங்களையும் சோதனையிட்டார்களா? பிரதமர் மோடி விமானத்தில் வருகிறார். அவர் வரும் போது எத்தனை ஆயிரம் கோடி பணம் கொண்டு வருகிறார் என யாருக்கு தெரியும். முதலமைச்சர் வாகனத்தை சோதனையிட்டது போல பிரதமரின் வாகனத்தையும் சோதனையிடுவார்களா? செய்யவில்லை என்றால் நயவஞ்சகத்தோடு செய்கிறார்கள் என்று தான் எடுத்து கொள்ள முடியும்" என்றார்.

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க