செய்திகள் :

'யார் Boss என்று நெதன்யாகுவுக்கு தெரியும்' - ட்ரம்ப்; ஈரான் போருக்கு பின், விரைவில் சந்திப்பு!

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் ஈரான் மீது போரை தொடங்கின.

ஆனால், இப்போது அமெரிக்கா 'போர் நிறுத்தம்' என்கிற வெள்ளைக் கொடியோடு நிற்க, இஸ்ரேல் இன்னும் முறுக்கிக் கொண்டே இருக்கிறது.

அதாவது, அமெரிக்காவும், ஈரானும் டிஜிட்டல் முறையில் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்டு விட்டது.

ஆனால், இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. அதனால், ஈரான் ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடுகிறது... அதில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு - ட்ரம்ப்

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. இப்படி மீண்டும் குழப்பம் உண்டாகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமே இஸ்ரேல் தான்.

இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

துருக்கியில் நேட்டோ மாநாடு ஜூலை 7-8 நடக்க உள்ளது. இதில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.

இதனால், இந்தப் பயணத்திற்குப் பிறகு ட்ரம்பை சந்திக்கிறார் நெதன்யாகு‌‌ என்று கூறப்படுகிறது.

இது குறித்து Axios செய்தி நிறுவனத்திற்கு ட்ரம்ப் கொடுத்த போன் கால் பேட்டியில், "நாங்கள் இருவரும் மிக நெருக்கமாக, நல்ல சுமுகமான உறவில் இருந்து வருகிறோம்.

இங்கு யார் Boss என்பது நெதன்யாகுவுக்கு நன்றாகவே தெரியும்." என்று கூறியிருக்கிறார்.

இருவரும் அமெரிக்கா வாஷிங்டன்னில் பிப்ரவரி 11-ம் தேதி சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

'தலைமைச்‌ செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது' - வானதி சீனிவாசன் காட்டம்

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.தவெக அரசு குறித்து வானதி சீனிவாசன், "இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிற கட்சிகளில் உள்ள நபர்களை எவ்வாற... மேலும் பார்க்க

"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்..!" - அமைச்சர்‌ நிர்மல் குமார்

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார்.அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது..."தற்போது திமுக, அதிமுக மற்றும் பார... மேலும் பார்க்க

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி - கண்ணீரில் தெஹ்ரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப் பயணத்த... மேலும் பார்க்க

"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார். தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகைச்செல்வன், "ஒரு உப்பை போல சுத்தமான தலைவராக இருப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம்: ஆளுநரிடம் திமுக நேரில் புகார்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறு... மேலும் பார்க்க