செய்திகள் :

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

post image

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது அடையாளத்தையே இழந்து உருக்குலைந்து கிடக்கிறது நவ்லாக் பண்ணை. இதனால், அங்கு போதை கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து, குற்றப் பின்னணி கொண்ட மர்ம நபர்களின் அட்டகாசமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சித்தரிக்கப்பட்ட படம்

இந்த நிலையில்தான் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னை ஒட்டு மையம் செயல்படும் நடுப்பண்ணை பகுதி வழியாக பைக்கில் வீடு திரும்பிய இளம் காதல் ஜோடி, புதர் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கிவிட்டு, 19 வயது இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை அவரக்கரைப் பகுதியிலுள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பார்த்திபன் (27), சங்கர் மகன் சிவராஜ் (27), நடராஜன் மகன் ராஜா (24) ஆகிய மூன்று பேரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கையிலும் போலீஸார் தீவிரம் காட்டினர். அதன்படி, இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பாலியல் குற்றவாளிகள்

வழக்கு விசாரணையின் முடிவில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபனமானதால், முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் ரூ.1.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது குற்றவாளியான சிவராஜ், மூன்றாவது குற்றவாளியான ராஜா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பாலியல் குற்றவாளிகளும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம... மேலும் பார்க்க

சேலம்: 4 பவுன் நகைக்காக 8 துண்டுகளாக பெண்ணை வெட்டி மூட்டையில் கட்டிய‌ கொடூரம்; அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் ... மேலும் பார்க்க

"ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி"- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024... மேலும் பார்க்க