ராணுவ வீரா்களுக்கு ஆதரவாக நெல்லையில் கையொப்ப இயக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு ஆதரவாக, சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராணுவ வீரா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், ரயில் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனா்.