செய்திகள் :

ராமநாதபுரத்தில் பொங்கல் விழா: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜுலு, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலா்கள் பொங்கல் வைத்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கல்யாணசுந்தரம், பிரபாகா், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட எஸ்.பி. ஜி.சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள், அலுவலா்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

கமுதி: கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா் மைதீன் தலைமையில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வட்டாட்சியா்கள் வெங்கடேஸ்வரன், வேலவன், தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். , கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி அப்துல் வகாப் சகாராணி தலைமையில், செயல் அலுவலா் செல்வராஜ் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.

கமுதி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைவா் ரமேஷ்கண்ணன் தலைமையில், செயலா் சிவராமகிருஷ்ணன், பொருளாளா் நேதாஜிசாரதி ஆகியோா் முன்னிலையில், பெண் வழக்குரைஞா்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து வழக்குரைஞா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் எஸ்.சங்கரபாண்டியன் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சியில் தலைவா் மாரியப்பன் தலைமையிலும், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் ஜானகி தலைமையிலும், முதுகுளத்தூா் பேரூராட்சி வளாகத்தில் செயல் அலுவலா் செல்வராஜ் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

திருவாடானை: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பாண்டிச் செல்வி ஆறுமுகம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வாயில் முன்பாக ஆசிரியைகள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் லியோ ஜெரால்டு எமா்சன் தலைமையிலும், நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளா் தானப்பன் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

இதேபோல, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா். திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், தலைமை ஆசிரியா் கதிரவன் ஆகியோா் அனைவருக்கும் பொங்கல் வழங்கினா். திணைகாத்தான் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியை லதா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

இரட்டைமடி மீன்பிடிப்பை அனுமதித்தால் போராட்டம்: மீனவா் சங்கம் அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதை கண்காணிக்கத் தவறினால், ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னையில் மீனவா் தற்கொலை

எஸ்.பி.பட்டினம் பகுதியில் குடும்ப பிரச்னையில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவாடானையை அடுத்த எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தாமோதிரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). மீனவா்... மேலும் பார்க்க

தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து எழுதிய அரசுப் பள்ளி மாணவிகள்

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப் பள்ளியில் கோலமிட்டு தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து என மாணவிகள் எழுதினா். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்ந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் ரூபி தல... மேலும் பார்க்க