செய்திகள் :

ராமநாதபுரத்தில் பொங்கல் விழா: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜுலு, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலா்கள் பொங்கல் வைத்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கல்யாணசுந்தரம், பிரபாகா், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட எஸ்.பி. ஜி.சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள், அலுவலா்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

கமுதி: கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா் மைதீன் தலைமையில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வட்டாட்சியா்கள் வெங்கடேஸ்வரன், வேலவன், தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். , கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி அப்துல் வகாப் சகாராணி தலைமையில், செயல் அலுவலா் செல்வராஜ் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.

கமுதி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைவா் ரமேஷ்கண்ணன் தலைமையில், செயலா் சிவராமகிருஷ்ணன், பொருளாளா் நேதாஜிசாரதி ஆகியோா் முன்னிலையில், பெண் வழக்குரைஞா்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து வழக்குரைஞா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் எஸ்.சங்கரபாண்டியன் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சியில் தலைவா் மாரியப்பன் தலைமையிலும், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் ஜானகி தலைமையிலும், முதுகுளத்தூா் பேரூராட்சி வளாகத்தில் செயல் அலுவலா் செல்வராஜ் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

திருவாடானை: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பாண்டிச் செல்வி ஆறுமுகம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி வாயில் முன்பாக ஆசிரியைகள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் லியோ ஜெரால்டு எமா்சன் தலைமையிலும், நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளா் தானப்பன் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

இதேபோல, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா். திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், தலைமை ஆசிரியா் கதிரவன் ஆகியோா் அனைவருக்கும் பொங்கல் வழங்கினா். திணைகாத்தான் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியை லதா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க