செய்திகள் :

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

post image

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது முறையாக இமாலய வெற்றிபெறுவார்.

ராயபுரம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும், அவ்வளவு ஏன்... மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவுகூட அண்ணன் ஜெயக்குமாருக்கே இருக்கிறது" என்கிறார்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்.

ராயபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருந்த அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராயபுரம் மக்கள் உங்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்?

``ராயபுரம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் தொகுதியின் வளர்ச்சியை உறுதிசெய்தவன் நான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த போஜராஜன் மேம்பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது தி.மு.க. கிழக்கு கல்லறை சாலை, மூலக்கொத்தளம் குடியிருப்பு இவையெல்லாம் நான் கொண்டுவந்தவைதான்.

டி.ஜெயக்குமார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடங்கி வீடற்ற அனைவருக்கும் புதிய வீடுகள் கிடைக்கச் செய்வேன்; மீனவர்கள் நலனை உறுதிசெய்வேன்; தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். தொகுதியில் அதிகரித்திருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிப்பேன்."

தொகுதியில் அடர்த்தியாக இருக்கும் இஸ்லாமியர்கள் வாய்ப்பு உங்களுக்குப் பின்னடைவு என்கிறார்களே?

``அப்படி ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், தொகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுமே வெளிப்படையாகவே எனக்கு ஆதரவு தெரிவிப்பதைச் செல்லும் இடங்களிலெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ராயபுரத்தின், அதிலும் இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை நான். என்மீது சாதி, மதச் சாயம் பூச நினைக்கும் அனைவரின் முகத்திலும் ராயபுரம் சிறுபான்மையின மக்கள் கரியைப் பூசுவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்."

டி.ஜெயக்குமார்

இந்த முறை உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

``இது எனது சொந்தத் தொகுதி. இங்கே இருக்கும் மக்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள். எதிர்பாராதவிதமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியைத் தழுவியிருந்தாலும், என்னைவிட என் ராயபுரம் மக்களே 'உங்களைப் போய் தோக்கடிச்சுட்டோமே...' என்று அதிக வருத்தமடைந்தார்கள். தேர்தலுக்காக மட்டுமே நான் தொகுதிக்குச் செல்லவில்லை. தோல்வியே அடைந்திருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளும், `ராயபுரத்தால் நான், ராயபுரத்துக்காகவே நான்...’ என்று தொகுதியில் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பல துயரங்களைப் பார்த்துவிட்டார்கள். இனி ஒருபோதும் ராயபுரத்தில், வேறு யாருக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடவே, மக்கள் வரவேற்பைப் பார்க்கும்போது எதிர் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைப்பதே சந்தேகம்தான்" என்கிறார் குதூகலத்துடன்!

``வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" - சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டின் உரிமைக்குரல் - சட்டமன்றத்தை நோக்கி அருண்ராஜ்

திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் அருண்ராஜுக்கு ஆதரவான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் களத்தில் இறங்கி விசாரிக்கையிலும், 'அருண்ராஜ... மேலும் பார்க்க

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.இளை... மேலும் பார்க்க

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனி... மேலும் பார்க்க